திடீரென வந்த நடிகர் அஜித்…. திணறி போன திருச்சி…. ரசிகர்களுக்கு கையசைத்து முத்தமிட்ட அஜித்….. மாஸ் வீடியோ இதோ….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வரும் அஜித் திருச்சியில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்பதற்காக அங்குள்ள ரைபிள் கிளப்பிற்கு நேற்று வருகை தந்தார். இதனை அறிந்த ரசிகர்கள் நடிகர் அஜித்தை பார்க்க அங்கு குவிந்தனர்.

இந்த கூட்டம் அதிகமானதால் போலீசாரால் கூட அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இது குறித்த தகவல் நடிகர் அஜித்திற்கு தெரிய வர ,அவர் உடனடியாக திருச்சி ரைபில் கிளப் கட்டிடத்தின் மாடிக்குச் சென்று அங்கிருந்து தன்னைக் காண கூடியிருந்த ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து கை அசைத்ததோடு மட்டுமல்லாமல் தம்ப்ஸ் அப் செய்து கைகூப்பி நன்றியும் தெரிவித்தார்.

அதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திகைத்துப் போயினர். அப்போது அங்கு எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.