குழந்தைகளுடன் கார் விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா…. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

இந்திய சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ரம்பா. தெலுங்கில் வெளியான ஆ ஒக்கடு அடக்கு என்ற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். அதனைப் போலவே தமிழ் சினிமாவில் உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இவர் விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இலங்கைத் தமிழரான இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகினார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது குடும்ப புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரம்பாவின் கார் சற்று நேரத்திற்கு முன்பு விபத்தில் சிக்கியுள்ளது.பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது ரம்பாவின் கார் மீது மற்றொரு கார் பயங்கரமாக மோதியதில் ரம்பா உள்ளிட்ட அவரது குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர். தற்போது அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் இளைய மகள் ஷாஷாவிற்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

RambhaIndrakumar???? இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@rambhaindran_)

இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அந்த குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த ரம்பா அந்த செய்தியை மிகுந்த வருத்தத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.