இத்தனை வருஷமா…. விஜய் மட்டும் ஏன் லிஸ்டில் இல்ல…. நடிகை சரண்யா பொன்வண்ணன் வருத்தம்….!!!!

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது பேவரட் அம்மாவாக வளம் வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் 1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய நாயகன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

8 வருடங்களாக ஹீரோயினியாக நடித்து வந்த இவர் 2003 ஆம் ஆண்டு முதல் அம்மா மற்றும் அண்ணி வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.  இந்நிலையில் நடிகர் விஜய்க்கு இதுவரை தாயாக நடிக்க முடியாமல் போனது கொஞ்சம் வருத்தம் தான் என நடிகை சரண்யா பொன்வண்ணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் .

இது குறித்து பேசிய அவர், இதுவரை அவருக்கு மட்டும் ஏன் தாயாக நடிக்கவில்லை என்ற சந்தேகம் எனக்கும் உள்ளது. நான் நடித்துள்ள நடிகர்களின் லிஸ்டில் விஜய் பெயர் மட்டுமில்லை என்பது வருத்தமளிக்கிறது . நல்ல கதைக்காக இருவரும் காத்திருக்கிறோம். நிச்சயம் நடிப்போம்”என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து இருவரும் எப்போது ஒன்றாக இணைந்து படத்தில் நடிப்பார்கள் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.