பல வருடங்களுக்கு பிறகு…. மீண்டும் பிரபல நடிகர்களுடன் இணைந்த குஷ்பூ…. போட்டோவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் 90-களில் கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பூ. இவரின் படங்கள் அனைத்துமே எப்போதும் ஹிட் கொடுக்கும். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு தற்போது இருபது வயதில் இரண்டு மகள்கள் உள்ளன. சினிமா வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் அரசியலில் களமிறங்கினார் குஷ்பு. பின்னர் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.இதனிடையே நடிகை குஷ்பூ தனது உடம்பை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

குஷ்பூ சரத்குமார் மற்றும் பிரபுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் குஷ்பூ சரத்குமார் உடன் இணைந்து நாட்டாமை திரைப்படத்திலும் பிரபுவுடன் இணைந்து சின்னத்தம்பி திரைப்படத்திலும் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

தற்போது இந்த இரண்டு நாயகர்களுடனும் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் இருவருடனும் இணைந்து குஷ்பூ எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.