அட… இப்படி ஒன்னு நடந்திருக்கா?…… பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பிக்பாஸ் ராஜூ….. அவரே சொன்ன ஷாக் தகவல்….!!!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு உள்ளது. பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஹிட் கொடுக்கும். அந்த வகையில் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த பிரபலமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியல் கூட்டுக் குடும்பத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தினம்தோறும் இந்த சீரியலை பார்க்கும்போது அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்ற ஆசையை தூண்டும் விதமாக இந்த சீரியல் அமைந்துள்ளது.

அதில் நாளுக்கு நாள் நடைபெறும் சண்டைகள் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் குடும்பத்தில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பதை பார்க்கும் போது மனம் நெகிழ செய்கிறது. சீரியலாக இருந்தாலும் ஒரு ரியலைஸ் ஸ்டோரியை கொண்டுவரும் வகையில் அந்த சீரியல் அமைந்துள்ளது. அதில் நடித்து வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான்.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் மற்றும் ஜீவா என இரண்டு கதாபாத்திரத்திலும் நடிப்பதற்கு பிக் பாஸ் போட்டியாளர் ராஜு ஜெயமோகன் முயற்சி செய்துள்ளார். முதலில் கதிர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சென்ற இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு ஜீவா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கும் முயற்சி செய்து உள்ளார். இருந்தாலும் அந்த வாய்ப்பும் அவருக்கு கிடைக்காமல் போனது.

இந்த தகவலை ராஜு,விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜு வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். ஒருவேளை பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ராஜு நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் அவருக்கு எந்த கதாபாத்திரம் கச்சிதமாக இருந்திருக்கும் என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.