தியேட்டரில் இருந்து நடிகையுடன் ஓட்டம் பிடித்த தனுஷ்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழ் சினிமா மட்டும் அல்லாமல் கோலிவுட் வட்டாரத்திலும் கலக்கி வருகிறார். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான தி கிரே மேன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. தற்போது தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.

இந்தத் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையிடப்பட்டது. இப்படத்தில் தமிழக உரிமத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார். மேலும் இப்படத்தில் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் நடிகர் பிரகாஷ்ராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராக்ஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இப்ப படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் சென்னை கோயம்பேடு ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தனர்.

இதனிடையே தனுஷ் தியேட்டரில் ரசிகர்களிடமிருந்து தப்பிக்க வேகமாக ஓடியுள்ளார். ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்த அவர் படம் முடிந்த பின்பு உடனடியாக தியேட்டரில் பின்புறம் வாசல் வழியாக நடிகை ராக்ஷி கண்ணாவின் கையைப் பிடித்துக் கொண்டு வேகமாக வெளியேறி காரில் ஏறி புறப்பட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.