யாரும் என்ன அப்படி கூப்பிடாதீங்க…. எனக்கு அது பிடிக்காது…. ரசிகர்களிடம் கெஞ்சிய நித்தியா மேனன்….!!!

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நித்தியா மேனன். நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வெப்பம், ஓ காதல் கண்மணி,மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இவர் தற்போது தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்தத் திரைப்படம் அண்மையில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் நான்கே நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனிடையே திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை நித்யா மேனன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அப்போது ரசிகர்கள் சிலர் அவரை தாய்க்கிழவி என அழைத்தனர்.

ஆனால் படத்தில் வரும் அந்த பெயர் தனக்குபிடிக்காது என்றும் அப்படி யாரும் கூப்பிடாதீங்க என அவர் தெரிவித்துள்ளார். தனுஷோடு மீண்டும் நடிக்க தயார் என்றும் அவரும் எப்போதும் கூப்பிட்டாலும் வந்து நடித்துக் கொடுக்க வேண்டும் என தெரிவித்ததாகவும் நித்தியா மேனன் தெரிவித்துள்ளார்.அவர் ரசிகர்களிடம் தாய் கிழவி என்று யாரும் கூப்பிட வேண்டாம் என்று கூறும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.