செல்வராகவனின் முன்னாள் மனைவி சோனியா அகர்வாலை பார்த்து….. திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா என்று கேட்ட ரசிகர்…. அதற்கு என்ன சொன்னார் தெரியுமா….????

தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் நடிகை சோனியா அகர்வால். இவர் இயக்குனர் செல்வராகவனால் பிரபலமானவர்.காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். அப்படத்தில் தனுஷ் உடன் தனது அசாத்திய நடிப்பை அற்புதமாக காட்டியிருப்பார்.

அதனைத் தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.அதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் கோவில்,புதுப்பேட்டை மற்றும் வானம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.பின்னர் 2006 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராக அவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணம் ஆகி நான்கு வருடங்கள் மட்டுமே இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர்.அதன் பின்னர் செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ஆனால் சோனியா அகர்வால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார்.தற்போது இவர் ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அதே சமயம் சீரியல்களிலும் நடிக்க தொடங்கி விட்டார்.இதை எடையை இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் சோனியா உடல் எடையை குறைத்து கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அதாவது கையில் மெஹந்தி போடப்பட்ட புகைப்படத்தை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ஆர் யூ கெட்டிங் மேரிட் என்ற கருத்தை கேட்டுள்ளனர்.

அதற்கு பதில் அளித்துள்ள சோனியா, ஏன், என் மெஹந்தி இவ்வளவு சிம்பிளாக இருக்காது என்று கூறியுள்ளார். இதற்கு முன்னதாக எஸ்பிபி மகன் பாடகர் சரணுடன் சோனியா நெருக்கமாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்து இரண்டாம் திருமணம் குறித்து வதந்தி பரவி வந்த நிலையில் தற்போது அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.