90களில் தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் இருந்து ஆங்கரிங் செய்து வருகிறார் தொகுப்பாளினி அர்ச்சனா. அவ்வகையில் சன் தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளனியாக இருந்து வந்த அர்ச்சனா நடிகர் சிட்டிபாபு உடன் இணைந்து தனது தொகுப்பாளர் பணியை தொடங்கினார்.
அதன் பிறகு இளமை புதுமை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமும் உருவானது. அவ்வாறு தொடர்ந்து தொகுப்பாளனி பணியை செய்து வந்த அர்ச்சனா கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அதனால் தொலைக்காட்சியில் இருந்து விலகிய அர்ச்சனா நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகம என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக ரீ என்ட்ரி கொடுத்தார். இவரைத் தொடர்ந்து இவரின் மகள் சாராவும் ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் அர்ச்சனா மற்றும் அவரின் மகள் சாராய இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். இந்நிலையில் இருவரும் இணைந்து அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளனர்.
ன் மகள் கூட Friends யாரும் பேச மாட்டாங்க.! கண் கலங்கி அழுத அர்ச்சனா மற்றும் சாரா pic.twitter.com/6ISVZ5QbBU
— RamaKrishna (@ramrabi11) September 5, 2022
அதில் பேசிய சாரா, நான் மீடியாவில் இருப்பதால் எனக்கு நண்பர்களே கிடையாது. எனக்கு நண்பர்கள் என்றால் அது என் அம்மா மட்டும்தான் என்று கண்கலங்க பேசியுள்ளார். இதற்கு அர்ச்சனாவும் பதில் அளித்து பேசியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.