எனக்கு மனைவியாக வந்தால்… மாதம் ரூ.25 லட்சம் சம்பளம்…. பிரபல நடிகைக்கு தொழிலதிபர் கொடுத்த வாக்குறுதி….!!!!

தமிழில் யாவரும் நலம் படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை நீது சந்திரா. இதனைத் தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டுப் பிள்ளை, ஜெயம் ரவியின் ஆதி பகவன் மற்றும் சேட்டை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர், ஒரு முன்னணி தொழில் அதிபர் தனக்கு மனைவியானால் 25 லட்சம் ரூபாய் சம்பளமாக தருவதாக கூறியதாக கூறியுள்ளார். அவர் தற்போது வேலையில்லாமல் இருப்பதாகவும், வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது என்று தெரியவில்லை என்றும் நடிகை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முன்னணி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தேசிய விருது பெற்ற 13 பேருடன் பெரிய படங்களில் பணியாற்றி உள்ளேன். இப்போது ஒரு பெரிய தொழிலதிபர் தனது மனைவியாக மாதம் 25 லட்சம் ரூபாய் தர முன்வந்துள்ளார். எனக்கு இப்போது எந்த வேலையும் இல்லை பணமும் இல்லை. எதிர்கால வாழ்க்கையைப் பற்றி மட்டுமே கவலை உள்ளது. நிறைய வேலைகள் செய்துவிட்டு தற்போது என்னையே வேண்டாம் என்று உணர்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் ஒரு வெற்றிகரமான நட்சத்திரத்தின் தோல்வியுற்ற கதை தன்னுடையது என்றும், ஒரு பிரபல காஸ்டிங் டைரக்டர் என் முகத்தைப் பார்த்து நீ சரியில்லை என்று கூறியதாகவும் கூறினார். அவரது பெயரை நான் குறிப்பிடப்படவில்லை. ஆடிஷன் முடிந்த ஒரு மணி நேரத்திற்குள் அவரது பதில், நீது தெளிவுபடுத்தினார். மேலும் கரம் மசாலா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் நீது சந்திரா. இவரின் கடைசி படம் குச் லவ் ஜெய்சா ஆகும்.