![nayanthara 4'__ (10)](https://tamilanmedia.in/wp-content/uploads/2022/11/nayanthara-4__-10-678x381.jpg)
பிரபல சீரியல் நடிகை யான மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினர் மத்தியிலும் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் திருமணம் குறித்து அறிவித்த நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் இவர்களின் திருமணம் குறித்த விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது.திருமணம் முடிந்த இத்தனை நாட்கள் ஆகியும் அவர்கள் குறித்த விமர்சனங்கள் என்னும் ஓயவில்லை. இருந்தாலும் இதற்கெல்லாம் கவலைப்படாமல் ஒவ்வொருவரின் விமர்சனத்திற்கும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார் ரவீந்தர்.அதனைப் போலவே தவறாக விமர்சிக்கும் பலருக்கும் மகாலட்சுமி பொறுமையாக தங்களின் திருமணம் குறித்த பதில்களையும் அவர் கூறி வருகிறார்.
தற்போது விமர்சனங்களை எல்லாம் பெரிதளவில் எடுத்துக் கொள்ளாமல் தற்போது மகாலட்சுமி ரவிந்தர் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர்.சீரியலில் கவனம் செலுத்தி வரும் மகாலட்சுமி ரவிந்தரை பிக் பாஸ் விமர்சனம் செய்யக்கூடாது எனச் சொல்லியும் அவர் செய்துள்ளார்.
இந்நிலையில் ரவீந்தர் உடல் எடையை குறைக்க வேண்டும் என மகாலட்சுமி கூறியதால் தினம்தோறும் வேக வைத்த முட்டையை மட்டும் சாப்பிட்டு வருவதாக கூறி ஒரு புகைப்படத்துடன் ஒரு பதிவை போட்டு உள்ளார் ரவிந்தர். அதில் ,என் வாழ்க்கையில் முட்ட இந்த அளவிற்கு கருகிப்போனதை நான் பார்த்தது கிடையாது. மகாலட்சுமி நிச்சயமாக என் எடை குறைய வைத்து விடுவார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
புது வாழ்க்கை… புது மனைவி சூப்பர்.. சமையல் ஆனால்…. அந்த முட்டை கருகி எடுத்து மனைவி கொடுத்துள்ளார் என சோகத்துடன் ரவீந்தர் பதிவுக்கு பலரும் கலாய்த்தபடி கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.