“எனக்கு முரளி துரோகம் செய்துவிட்டார்”….. பல வருட உண்மையை போட்டுடைத்த தேவயானி கணவர்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் தான் ராஜகுமாரன். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் பல படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமா உலகில் முதன் முதலில் 1999 ஆம் ஆண்டு வெளியான நீ வருவாய் என என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களை இயக்கியும் நடித்தும் வந்தார்.

இவரின் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. இதனிடையே இவர் நடிகை தேவயானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதேசமயம் தேவயானியை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது இவர்தான்.இவர்களுடைய திருமணத்திற்கு தேவையான வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் ஓடிப்போய் திருத்தணியில் 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளன.

தேவயானி தற்போது சின்ன திரையிலும் வெள்ளி திரையிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் ராஜகுமாரன் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் முரளி குறித்து அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். தான் சினிமாவில் இருந்து விலகியதற்கு அதுதான் முக்கிய காரணம் என அவர் கூறியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.