தனது வீட்டில் பிரபல தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை…. பெரும் அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகம்…..

சென்னையில் காதல் தோல்வியால் நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவன்யூ என்ற பகுதியில் வசித்து வரும் பவுலின் என்கிற தீபா என்பவர் சினிமா துணை நடிகையாக உள்ளார். 29 வயதாகும் இவர் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் மற்றும் வாய்தா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பிறகு போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் நடிகை பவுலின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.