சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் ரோஜாவின் மகள்…. உண்மையை போட்டு உடைத்த ஆர்.கே.செல்வமணி…. ரசிகர்கள் ஷாக்…..!!!!

தமிழ் சினிமாவில் 80-90 களில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பல மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்தன. இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ரோஜா இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்ன திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன் பிறகு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் ஆர் எஸ் கட்சியில் இணைந்தார். அங்கு ரோஜாவுக்கு விளையாட்டு மட்டும் மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஒரு பக்கம் நடிகையாகவும் மறுபக்கம் அரசியல் பிரபலமாகவும்  உள்ளார்.

இதனிடையே ரோஜாவின் மகள் மற்றும் அன்ஷு மாலிகா திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. ரோஜாவின் மகள் அன்ஹு மாலிகா விக்ரம் மகன், துருவ்விக்ரம் நேரடியாக தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் அந்த படத்தில் ரோஜாவின் மகள் கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக  இணையத்தில் செய்திகள் பரவி வந்தன.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரோஜாவின் கணவர் செல்வமணி, எனது மகளுக்கு சிறுவயதிலிருந்தே சயின்டிஸ்ட் ஆக வேண்டும் என்பதுதான் விருப்பம். குழந்தைகள் மீது விருப்பத்தை திணிக்கும் பெற்றோர்களாக நானும் ரோஜாவும் இருந்தது கிடையாது.எனது மகள் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வேண்டும் என்பதை நிறைவேற்றி வைத்தோம்.

தற்போது பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க அமெரிக்க சென்றுள்ளார். சிறுவயதிலிருந்தே பெரிய படிப்பாளி 500 விருதுகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வாங்கியுள்ளார். இன்னும் நாலு வருஷம் எனது மகள் அமெரிக்காவில் தான் இருப்பாள். அதனால் படத்தில் நடிக்க போறா, இந்த ஹீரோவுக்கு ஹீரோயினி அறிமுகமாக போறா என்பதெல்லாம் வதந்தி தான். எந்த செய்தியிலும் உண்மையே இல்லை என அவர் கூறியுள்ளார்.