தெலுங்கானா மாநிலத்தில் தையல் வேலை புரியும் பாசகாசிம் என்பவருக்கும் பாத்திமா என்பவருக்கும் திருமணம் ஆகி 14 வருடங்கள் ஆகிறது. திருமணம் ஆன முதலே மனைவி தேவையில்லாமல் அதிகம் செலவு செய்வதாக கணவர் கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில் 2 மாதத்திற்கு

முன்னர் ஊராட்சி அலுவலகம் ஒன்றில் பாத்திமாவுக்கு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் வேலை கிடைத்துள்ளது. அங்கு வேலையை ஒழுங்காக செய்யாமல் தனது மொபைலில் டிக் டாக் பயன்படுத்துவதிலேயே ஆர்வம் காட்டி வந்துள்ளார். குடும்பத்தை ஒழுங்காக கவனிக்காமல் டிக் டாக்கில் வீடியோ போடுவதையே வேலையாக வைத்திருந்த பாத்திமா மீது கோபம் அடைந்தார் கணவர். இது குறித்து கடந்த 27ம் தேதி
.

மனைவியுடன் சண்டை போட்டுள்ளார் கணவர். ஆனாலும் மனைவி ஏற்க மறுத்ததால் சப்பாத்தி கட்டையால் பாத்திமாவின் மண்டையில் தாக்கியுள்ளார். பின்னர் பாத்திமா இறந்துவிட அவர் எப்படி இறந்தார் என்று தெரியாதது போல நாடகம் ஆடியுள்ளார். ஆனால் போலீஸ் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பாத்திமாவை கணவர்தான் இப்படி செய்துள்ளார் என்று உறுதிப்படுத்தினர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
