நடிகை வனிதா விஜயகுமார் கடந்த 27ம் திகதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு பீட்டரின் முதல்மனைவி எலிசபெத் பயங்கர எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இப்பிரச்சினை பரபரப்பாகவும் பேசப்பட்டு வருகின்றது.
எலிசபெத் பேசியதற்கு வனிதாவும் தக்க பதிலடி கொடுத்து வருவதுடன், இதில் கருத்து கூறிய லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் வனிதா தாறுமாறாக பேசியுள்ளார். மேலும் பல பிரபலங்கள் இவரின் செயலில் வாய்கொடுத்து மாட்டிக்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி வனிதாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். தற்போது இயக்குனர் ரவீந்தர் வனிதாவின் திருமணம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். வனிதா இவரையும் விட்டுவைக்காமல் தாறுமாறாக தி ட்டித் தீ ர்த்த தோடு, இறுதியில் மன்னிப்பும் கேட்க வைத்துள்ளார். இந்நிலையில் சூர்யா தேவி என்ற பெண் வனிதாவிற்காகவே யூடியூப் சேனல் ஆரம்பித்து, அவரை நார் நாராக கி ழித்து காணொளியினை வெளியிட்டுள்ளார்.

குறித்த பெண் வனிதாவின் முன்னாள் ரசிகையாக இருந்தவர், தற்போது வனிதாவின் செயல் மிகவும் கேவலமாக மாறிவருவதால் நான் இவ்வாறு மாறியுள்ளேன் என்றும், உன்னை எதிர்ப்பதற்கு நான் இருக்கிறேன் என்று சவால் விட்டதோடு, தனது பாணியில் கெ ட்ட வார்த்தையை பயன்படுத்தி தி ட்டி தீ ர்த்து ள்ளார்.