தந்தை அவ்வளவு கூறியும் நேற்றிரவு லொஸ்லியா செய்ததைப் பாருங்க… இன்னும் திருந்தவில்லையா? புகைப்படம் உள்ளே

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் தற்போது 82 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் உள்ளே சென்றதையடுத்து லொஸ்லியா, கவின் இடையே பிரிவு ஏற்பட்டது. லொஸ்லியாவின் தந்தை மிகவும் வறுத்தெடுத்தார். ஆனால் கவினை செல்லும் பொழுது கவலைபடாமல் இருங்க நல்லா கேம் விளையாடுங்க என்று கூறிவிட்டு சென்றார்.

இதனால் இருவரும் பிரிந்துவிட்ட நிலையில் லொஸ்லியா, கவின் ஆர்மியினர் சற்று கவலையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினத்தில் கவின், லொஸ்லியாவின் ரொமாண்ஸ் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது என்று ரசிகர்கள் பயங்கர குஷியில் காணப்படுகின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில்

போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போதும் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தனர். இந்த புகைப்படம்

தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் கவின் மற்றும் லாஸ்லியா இருவருக்கும் உள்ள ரொமான்ஸ் போகவில்லை என்று கவிலியா ஆர்மி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.