தீ யாய் பரவும் வனிதாவின் வருங்கால கணவரின் புகைப்படம்…! தாயின் திருமணம் குறித்து மகள் என்ன கூறினார் தெரியுமா?

பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை வனிதா தற்போது மூன்றாவது திருமணம் செய்வது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. வரும் 27ம் திகதி மிகவும் எளிமையான முறையில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இந்நிலையில் வனிதாவின் வருங்கால கணவரது புகைப்படமும் தீயாய் பரவி வருகின்றது. அவரைக்குறித்து வனிதா பேசுகையில், அவர் ஒரு திரைப்பட இயக்குனர். அன்பானவர், அக்கறை ஆனவர் மற்றும் என் மனதை திருடிய நேர்மையான மனிதர் மற்ற அனைத்தும் நீங்கள் கூடிய விரைவில் தெரிவித்துக் கொள்வீர்கள்.

எங்களது திருமணம் அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப நடைபெறும். மேலும், இந்த திருமணத்தில் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்வார்கள். திருமணத்திற்குப் பின்னர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் நான் வெளியிடுகிறேன் என்று கூறியுள்ளார். வனிதாவின் திருமணம் குறித்து அவரது மகள் ஜோவிகா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்று உங்களுக்கு தெரியும். என்ன நடந்தாலும் நான் உங்களை ஆதரிப்பேன். நான் உங்களிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன். உங்களுடன் இருந்த இந்த 15 வருடங்களும் சிறப்பாக இருந்தது.

மேலும் உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு பிடித்த வழியில் வாழ்கிறீர்கள். அதில் எந்த தவறும் இல்லை. உங்களிடம் இருக்கும் மகிழ்ச்சிக்கு நீங்கள் நிச்சயம் தகுதியானவர். நான் இதனை உங்கள் மகளாகவும், நண்பியாகவும் சொல்கிறேன். வாழ்த்துகள் மா என்று தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

I’m counting my blessings

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on