ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி பகுதியை சேர்ந்தவர் சரோஜம்மாள். 65 வயதான இவரை சில மாதங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் அம்மிகல்லை போட்டு உயிரிழந்து கிடந்தார். இதனால் இது குறித்து நகரி பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரை கைது செய்தனர். அப்போது, அவரிடம் மூக்குத்தி, தாலி போன்ற நகைகள் அவரிடம் இருந்ததால், பொலிசார் கிடுக்கிடுப் பிடி விசாரணை நடத்திய போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில், எனக்கும் இந்திராணி என்ற பெண்ணுக்கும் பழக்கம் இருந்தது. இதில் இந்திராணி ரயிலில் அடிபட்டு இறந்து போனார்.

அவருக்கு நிர்மலா என்ற தோழியுடன் தகராறு இருந்தது. இதனால் நிர்மலாவை போட்டுத்தள்ள வேண்டும் என்று இந்திராணி என்னிடம் கூறி கொண்டே இருப்பார். இதனால் அரக்கோணத்தில் டெய்லராக உள்ள நிர்மலா வீட்டுக்கு சென்றேன்அங்கு தனியாக இருந்த நிர்மலாவை ஒரு அறைக்குள் இழுத்து சென்று பூட்டிவிட்டேன். பிறகு நிர்மலா மீது அம்மிக்கல்லை தூக்கிப்போட்டேன் அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

பிறகு பிணத்துடன் சல்லாபமாக இருந்தேன். இதைத் தொடர்ந்து நகைகளை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டேன். இப்படித்தான் சரோஜம்மாவையும் செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளான். மேலும் ஆனந்தன், அரக்கோணத்தில் உள்ள பல பெண்களை இப்படி செய்துள்ளார்,
அந்த சடலங்களுடன் சல்லாபமாக இருப்பது அவரின் பழக்கமாகவும் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை எத்தனை பேரை இப்படி செய்துள்ளார் என்று தெரியவில்லை. அதன் காரணமாக ஆனந்தனை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
