![lathmewyu](https://tamilanmedia.in/wp-content/uploads/2019/03/lathmewyu.jpg)
பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று தங்களிடம் நட்பாக பழகும் பெண்களை தனியாக அழைத்து சென்று கூட்டுப் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் கூறினார். இதையடுத்து இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. வீடியோவில் பெண்களின் மரண ஓலங்கள் போல் குரல்கள் கேட்பதால் அதை கேட்போர் மனம் பதைபதைக்க வைக்கிறது. இந்த நிலையில் குற்றவாளியாக இருக்கும் கொடூர அரக்கன் ஒருவனின் தாய் அதற்குள் தனது மகனுக்கு ஜாமீன் எடுப்பதற்கு நீதிமன்றத்திற்கு வந்த காணொளி தற்போது தீயாய் பரவி வருகின்றது.
குறித்த காட்சியில் தனது மகன் தவறே செய்யவில்லை என்று தனது மகனை நியாயப்படுத்த விரும்பிய தாயினை பொதுமக்கள் அடுத்தடுத்து கேள்விகளை தொடுத்தனர். ஒரு கட்டத்தில் பதில் கூற முடியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்துள்ளார்.