![ADIO ABR](https://tamilanmedia.in/wp-content/uploads/2018/09/ADIO-ABR.jpg)
கடந்த சில நாட்களாக முன்னர் சமூக வலைதளங்கள் முழுவதும் அபிராமி பற்றிய செய்திகள் தான் மிகவும் வைரலாக பரவி வந்தது. பெற்ற தாயே கள்ளக்காதலுக்காக இரண்டு குழந்தைகளை கொடுரமாக கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் இரட்டை கொலை செய்த அபிராமியும் அதற்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலர் சுந்தரமும் காவல்துறையால் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இருவரிடமும் நடத்திய விசாரணையில் அபிராமி, சுந்தரத்திடம் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக தான் குழந்தைகளை கொன்றதாக ஒப்புக்கொண்டார்.ஆனால், அபிராமியுடன் தொடர்பில் இருந்தது உண்மை தான்… ஆனால், குழந்தைகளை நான் கொலை செய்ய சொல்லவில்லை என்று சுந்தரம் தெரிவித்தார்.
இந்நிலையில் குழந்தைகளுக்கும், தனது கணவருக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த பின்னர் அபிராமி மற்றும் சுந்தரம் பேசிய தொலைபேசி ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த ஆடியோ மூலம் அபிராமி மற்றும் சுந்தரம் இருவரும் திட்டமிட்டு தான் கொலை செய்துள்ளார்கள் என்று தெளிவாக தெரிகிறது. தற்போது இந்த ஆடியோ பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த ஆடியோ பதிவு