சொந்த மனைவியை தனது தம்பிக்கு திருமணம் செய்து வைத்த கணவன் !! இப்படி ஒரு காரணமா?

மனைவியை தனது தம்பிக்கு திருமணம் செய்து வைத்த கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலத்தின் பகல்பூரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. பவன் கோஸ்வானி என்பவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில்இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது.திருமணமாகி பல வருடங்கள் இவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாகவே சென்றிருக்கிறது.இரண்டு ஆண்டுகள் கழித்துதான் இந்த பிரச்சனை தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பவனின் தம்பி சஜனுடன் பிரியங்காவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பவனுக்கு தற்போது தெரியவர அவர் விபரீத முடிவை எடுத்தார்.அதன்படி தனது குடும்பம் சண்டையிட்டு பிரியாமல் இருக்க மனைவியை தனது தம்பிக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தார்.இதையடுத்து முறைப்படி பிரியங்காவுடன் பவன் விவாகரத்து பெற்று இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.இந்த திருமணத்தில் ஊர் மக்களும், உறவினர்களும் கலந்து கொண்டனர்.திருமணத்துக்கு பின்னர் பவன் அந்த ஊரை விட்டு வேறு இடத்துக்கு சென்றுவிட்டார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் அவரது மனைவியின் முகத்தை பார்க்க என் மகன் விரும்பவில்லை அதனால் தான் இந்த ஊரை விட்டே சென்று விட்டான் என அவரது தாயார் குறிப்பிட்டார்.மேலும் மகனை பிரிந்து மிகவும் வாடுவதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையில், சஜனை இனி அப்பா என அழைக்க வேண்டும் என தனது குழந்தையிடம் பிரியங்கா கூறி வருவதோடு, நான் உண்மையாக சஜனை தான் நேசிப்பதாகவும் கூறியுள்ளார்.ஆனால் இந்த வித்தியாசமான விஷயம் அந்த ஊர் முழுவதும் பரவி அந்த பெண் மீது கோபத்தினையும் கணவர் மீது அனுதாபத்தையும் சம்பாதித்து வருகிறது.