பட்டப்பகலில் நீதிபதியின் மனைவி, மகன் மீது துப்பாக்கிசூடு நடத்திய பாதுகாவலர்..! கூடி நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள்? அதிர்ச்சியூட்டும் வீடியோ

டெல்லியில் குர்கான் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் நீதிபதியின் மனைவி மற்றும் மகன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது அவர்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாவலரே என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாதுகாவலரின் பெயர் மகிபால் என்பதும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.