நடிகைகள் சம்பாதிக்கும் காலத்தில் ஆடரம்பரமாக செலவு செய்துவிட்டு பின்னர் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவிக்கும் சம்பவங்கள் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அரங்கேறி வருகிறது.. குடும்ப செலவிற்குக் கூட பணம் இல்லாமல் தனது குழந்தைகளுடன் மருத்துவமனையில் தஞ்சம் அடைந்திருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளத்தில் காதல் வாழ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சார்மிளா.தமிழில் நல்லதொரு குடும்பம், உன்னைக் கண் தேடுதே உள்ளிட்ட படங்களில் நடித்து ஓரளவுக்குப் பிரபலமானார். பின் படங்கள் எதுவும் ஒப்பந்தம் ஆகாததால் பொருளாதலா பிரச்சனையில் சிக்கிக்கொண்டார்.கடைசியாக இவன் வேற மாதிரி படத்தில் சுரபிக்கு அம்மாவாக நடித்தார்.
இந்நிலையில் நடிகை சார்மிளாவிற்கு ஆர்த்தோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது இதனால் இவர் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். அவரை பார்ப்பதற்குக் கூட மருத்துவமனைக்கு யாரும் வருத்துவதில்லையாம். தற்போது தனது குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்துவரும் நடிகை சார்மிளா. மருத்துவச் செலவிற்குக் கூட பணம் இல்லாமல் கஷ்டத்தில் உள்ளாராம்.