தமிழ் சினிமாவின் புன்னகை இளவரசி என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில காலத்திற்கு சினேகா நடிப்பதிலிருந்து விலகி இருந்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில், நடிகர் பிரசன்னாவிற்கு கலைமாமணி விருது கிடைத்தது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பிரசன்னா தற்போது சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாகவும் விரைவில் இன்னொரு குட்டி வீட்டிற்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் பலரும் பிரசன்னா சினேகா தம்பதியினருக்கு ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். கர்ப்பமாக இருப்பதால் சினேகா சில மாதங்கள் சினிமாவில் நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.
