தன் துணைவரோடு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தான் உடல் ரீதியிலான உறவு வைத்துக் கொள்ளவேயில்லை என ஒரு பெண் தெரிவித்துள்ளார். Derbyshireஐச் சேர்ந்த Claire Almey (42), தான் 2017இலிருந்து தனது துணைவருடன் தாம்பத்ய வாழ்வை அனுபவிக்கவில்லை என்று கூறியுள்ளார். அதற்கு காரணம் 2017ஆம் ஆண்டு புற்றுநோய் ஏற்பட்டதையடுத்து Almeyயின் இரண்டு மார்பகங்களும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. தனது அழகான மார்பகங்கள் அகற்றப்பட்டதால், தான் பெண்ணாகவே உணரவில்லை என்று கூறியுள்ள Almey.

தனது கணவருடன் நெருக்கமாக இருக்க மறுத்துவருகிறார். அவரது துணைவரான Jon (40), தான் இன்னும் அவரிடம் ஈர்ப்பு கொண்டிருப்பதாகக் கூறியும், தாங்கள் திட்டமிட்டுள்ள திருமணத்திற்கும் மறுப்பு தெரிவித்து வருகிறார் Almey. 2007ஆம் ஆண்டு ஒரு நண்பர் மூலம் சந்தித்து காதலர்களான Almeyயும் Jonம் இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில்

2013 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்கள். ஆனால் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் Almeyக்கு புற்றுநோய் இருப்பது தெரியவர அவர்களது திருமணம் தள்ளிவைக்கப்பட்டது.
அறுவை சிகிச்சை மூலம் அவரது உடலை முன்போல் மாற்றுவதற்காக Almeyகாத்திருக்கிறார். ஆனால் அதற்கு இன்னும் 12 மாதங்கள் காத்திருக்க அவர் வேண்டும்.
