கர்ப்பகாலத்தில் வேண்டாம் என்று கூறியும், கேட்காமல் அடம்பிடித்த நடிகை சினேகா..!! இணையத்தில் வெளியான வைரல் வீடியோ உள்ளே

நடிகை சினேகா கதைகளை தேர்ந்து எடுத்து நல்ல கதாபாத்திரம் வந்தால் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் “வேலைக்காரன்” படத்தில் நல்ல வலுவான கதாபாத்திரம் என்பதால் நடிக்க ஒப்பு கொண்டார். அதன் பிறகு சமீபத்தில் பொங்கலுக்கு வெளியான “பட்டாஸ்” படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார் சினேகா. இந்த படத்தில் சினேகாவை ஒரு கதாநாயகியா மட்டும் நினைத்து ஒரு பாடல் , டூயட் என்று போகாமல் ஒரு வீரம் கொண்ட தற்காப்பு கலை தெரிந்த பெண்ணாக ஒரு நல்ல ரோலில் நடிக்க வைத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். சினேகா “பட்டாஸ்” படத்தில் அடி-முறை என்ற நம் மறைந்து போன பரமப்பரிய கலையை இந்த கதை எடுத்து உரைப்பதால் சினேகா அடி-முறையை கற்றுக்கொண்டு கடினமாக உழைத்தார்.

அந்த நேரத்தில் சினேகா கர்ப்பமாக இருப்பது அனைவர்க்கும் தெரியவந்தது. இயக்குனர் மற்றும் சக – நடிகர்கள் எவ்வளவோ கூறியும் கேட்காமல் கஷ்டப்பட்டு பயிற்சி எடுத்து தனது ரோலை அருமையாக நடித்து கொடுத்து இருக்கிறார். அவருடைய உழைப்பு இந்த படம் பார்த்தவர்கள் அனைவர்க்கும் நன்கு தெரியும்.