ராஜஸ்தாம் மாநிலத்தில், கரவுளி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலனுடன் தனிமையை விரும்பி அம்மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிக்கு சென்று அந்த மலையின் உச்சியில் அமைந்து பேசிக்கொண்டு இருந்த வேளையில், மலையடிவாரத்தில் இருந்து உள்ளூர் இளைஞர்கள் சிலர் அந்த காதல் ஜோடியை நோட்டமிட்டபின்னர், அவர்களை சுற்றி வளைத்து தாக்கி உள்ளது.

இதனால் அவர்களுக்கு அஞ்சி காதலன் அமைதியாக இருந்துள்ளான். பின்னர் அந்த கொடூர கும்பல் காதலன் கண்முன்னே, அந்த இளைஞர்கள், மாணவியை மிரட்டி கூட்டாக சீரழித்துள்ளனர். இந்த சம்பவத்தில், சுமார் 7 பேர் கொண்ட கொடூர கும்பலில் உள்ள அனைவரும் 19 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒருவர் வீடியோவாக படம்பிடித்த இளைஞர், தங்கள் குழுவின் சாதனை என்பதை போல சமூக வலைதளங்களில் பதிவி இட்டுள்ளான். ஆனால் இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு புகார் எதும் கொடுக்கவில்லை.

இதையடுத்து , வீடியோ காட்சிகளை அடிப்படையாக கொண்டு ராஜஸ்தான் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்வம் மாதரி அல்வாரில் கடந்த ஏப்ரல் மாதம் பெண் ஒருவர்,
அவரது கணவரின் கண் முன்னால் சீரழிக்கப்பட்டார். அப்போது அதை வீடியோவாக எடுத்த கும்பல், சமூகவலைதளங்களிலும் வெளியிட்டது. அதேபோல் இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.
