கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு வேலைக்காரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

‘முகேஷ் அம்பானி’ என்று அழைக்கப்படும் ‘முகேஷ் திருபாய் அம்பானி’ இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். இளம் வயதிலேயே தன்னுடைய தந்தையுடன் வணிகத்தில் ஈடுபட்ட அவர், மிக விரைவில் ஒரு தொழிலதிபராக வளர்ச்சிப் பெற்றார். ‘இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் போற்றப்படும் ‘திருபாய் அம்பானியின்’ மகன் ஆவார். ‘ரிலையன்ஸ்’ என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியதில் முகேஷின் பங்களிப்பு முக்கியமானது. இவர், ஃபார்சூன் குளோபல் 500 பட்டியலில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் கூடுதல் பங்குகளை உடைய தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஆவார்.

2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘உலகின் பணக்கார விளையாட்டு உரிமையாளராக’ ஃபோர்ப்ஸ் அமெரிக்க இதழ், இவரது பெயரைப் பட்டியலில் வெளியிட்டது.இந்தியாவின் தொழிலதிபரும், ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானி தனது வீட்டில் வேலைபார்க்கும் வேலைக்காரர்களுக்கு ஒரு வடத்திற்கு ரூ.24 லட்சம் சம்பளம் வழங்குகிறார்.

இடையில் அம்பானி வீட்டில் போனஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர, தன் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு 20 லட்ச ரூபாய் வரை பாக்கெட் மணியாக வழங்குகிறார் அம்பானி.தன் வீட்டில் பணியாற்றுகிறவர்களின் குழந்தைகளுக்கு இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்குகிறார்.அதோடு இரண்டு வேலைக்காரர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த பாதுகாப்பு வீரர்களுக்கு மாதம் பதினைந்து லட்சம் வரை வழங்குகிறார்.முகேஷ் அம்பானி கடந்த 15 ஆண்டுகளாக 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பளம் அவரே நிர்ணயித்துக்கொண்ட தொகை ஆகும்.இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்