பிக்பாஸ் வீட்டில் நேற்று மதுமிதா-சாண்டி பஞ்சாயத்து தான் மிகப் பெரிய பெரிச்சனையாக இருந்தது. சாண்டி கொடுத்த விளையாட்டுத்தனமான டாஸ்க்கை, மதுமிதா மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்ள, சாண்டி அப்படி தான் டாஸ்க் கொடுப்பேன் என்று கூறினார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற மதுமிதா, ஒரு பெண் அழுவதை பார்ப்பவன் தான் ஆம்பளையா… ச்சீ… என்று காரி துப்பினார். இதனால் அங்கிருந்த போட்டியாளர்கள் சரவணன், சேரன் போன்றோர் என்ன செய்வதென்றே தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர். இந்நிலையில் சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல் பசுபதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மது பாத்து பேசு, காரி துப்பிர என்று பதிவேற்றியுள்ளார்.
இதனால் வெளியே வந்த பின்பும், எப்படியும் காஜல் பசுபதியும், மதுமிதாவும் மீட் பண்னத் தான் செய்வார்கள் அப்போது தெரியும் இதன் பின்விளையும் மதுமிதாவிற்கு. அவர் வெளியிட்ட பதிவு இதோ
Madhu … vaarthaiye pathu pesu ?
Kaari thupara ?— Kaajal Pasupathi (@kaajalActress) July 24, 2019