“சினிமா மீது உள்ள காதலால். தன் சொந்த பெயரையே மாற்றிய ராஜ்கிரண்”..!!! நடிகர் ராஜ்கிரணின் உருக்கமான பேட்டி…!!

தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் அன்று முதல் இன்றுவரை நிலைநிற்கிறார்கள். அதற்க்கு மிக முக்கியமான காரணம் அவர்களது நடிப்பும், அதை சார்ந்து திறமையும் தான் என்று தான் சொல்ல வேண்டும்.ராஜ்கிரண் இவருடைய நடிப்பை பற்றி சொல்ல தேவை இல்லை. அந்த அளவுக்கு ஒரு நேரத்தில் இவரது நடிப்பை பார்த்து வியந்து போனவர்கள் பலர். இவர் வேட்டியை மடக்கி கட்டிக்கிட்டு வில்லன்களோடு சண்டை போடும் போது மொத்த தியேட்டரில் விசில் சத்தம் பறக்கும்.

அதும் அல்லாமல் இவர் நல்லி எலும்புக்கு ஸ்பெஷல் என்றே சொல்லலாம். ராஜ்கிரண் ஒரு நல்ல நடிகர் என்பதை தாண்டி அவர் ஒரு நல்ல மனிதர் என்றே தமிழ் திரையுலகில் உள்ளவர்கள் கூறுவார்கள்.  அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்தவர். முதலில் இவருடைய பெயர் “மொஹைதீன் அப்துல் காதர்” என்று தான் இருந்தது. சினிமாவில் இறங்கும் போது பொது பெயராக இருக்க வேண்டும் என்று நண்பர்கள் ஆலோசனை சொன்னார்கள் அதனால் அப்துல் காதர் என்ற பெயரை மாற்ற முடிவு செய்தேன். “j” என்ற எழுத்தின் சத்தம் பெயரில் கேட்டால் எளிதில் பிரபலம் ஆகலாம் என்று நண்பர்கள் கூறினார்கள். ஜெய்சங்கர் , ஜெயலலிதா போன்ற பிரபலங்களின் பெயரில் “ஜெ” என்ற எழுத்து வருவதால் நானும் ஒப்பு கொண்டேன்.

அதனில் “RAJ” என்றும் ,இவர் நடத்திய “REDSUN ” என்ற கம்பெனி நடத்தி வந்தார். அதனால் சூரியனில் இருந்து வரும் கதிர் தான் “kiran” என்பார்கள். அதனால் தான் “RAJKIRAN” என்ற பெயரை வைத்தேன் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.