பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில், போட்டியாளர்கள அனைவரும் வெளியில் சென்று பல புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் பாய்ஸ் கேங் இருந்ததைப் போன்று, ஷெரின், சாக்ஷி மற்றும் அபிராமி ஆகியோர் சேர்ந்து ஆரம்பத்தில் பெண்கள் அணி ஒன்று இருந்தது. எந்த சண்டை நடந்தாலும், தங்களுக்குள் ஒற்றுமையாக புகை பிடிக்கச் செல்வது, தங்களது மன காயங்களை பரிமாறிக் கொள்வது, ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொள்வது என அவர்கள் ஒற்றுமையாக இருந்தனர்.
இதைத்தொடர்ந்து வெளியேறிய சாக்ஷி மற்றும் ஷெரின் சேரனின் வீட்டிற்கு சென்று, சேரன் வாங்கிய விருதுகளை பார்த்து வாயடைத்துபோயுள்ளனர். மேலும் அதை புகைப்படம் எடுத்தும் காணொளியாகவும் இணையத்தில் பதிவிட்டுள்ளார் சாக்ஷி..