“திருமணத்திற்கு முன்பே சிலருடன் உ ட லு றவு வைத்திருக்கிறேன்”.. !! மூன்றாவது திருமணம் செய்த பிரபல நடிகை ஓபன் டாக்…!!

பிரபல டிவி நடிகை நேஹா பெண்ட்சே என்பவரது திருமணம் சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர் ஷர்துல் பாயாஸ் என்ற தொழிலதிபரை அவர் திருமணம் செய்துகொண்டார்.பெரும்பாலும் மராத்தி திரைப்படங்களில் நடித்துள்ள அவர் தமிழில் மௌனம் பேசியதே திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஷர்துல் பாயாஸ்-க்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் நடிகை நேஹா அவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பலரும் இந்த திருமணம் பற்றி நடிகை நேஹா பெண்ட்சேவை தவறாக பேசி வருகின்றனர். அதை பார்த்து கடுப்பான தொலைகாட்சி நடிகை நேஹா கோபமாக பேட்டி அளித்துள்ளார்.

நான் திருமணம் செய்து கொண்ட ஷர்துல் விவாகரத்து ஆனவர் என்பதை தான் குறையாக பேசுகிறார்கள். அப்படியென்றால், நான் ஒன்னும் சரியானவள் இல்லையே என கூறியுள்ளார்.தொடர்ந்து பேசிய அவர் “இதில் என்ன பிரச்சனை. தொழில் உள்ளிட்ட சில விஷயங்களால் பலரும் தாமதமாகத்தான் திருமணம் செய்துகொள்கிறார்கள். அதனால் திருமணத்திற்க்கு முன்பே பலருக்கும் இரண்டு மூன்று பழக்கங்கள் இருப்பது எல்லாம் சாதாரணமாகிவிட்டது” என நேஹா தெரிவித்துள்ளார்.