‘திருமணம் ஆகியும் குறையாத கவர்ச்சி’… கடற்கரையில் நீச்சல் உடையில் தனது மகளுடன் என்ஜாய் பண்ணும் ஸ்ரேயா…

தமிழ் திரை உலகில், ஒரு காலகட்டங்களில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரேயா சரண் அவர்கள். இவர் தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் தனது காதலனை ரகசிய திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த நிலையில் திடீரென தனக்கு ஒரு குழந்தை பிறந்த ஒரு வருடம் ஆகிறது எனக் கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

மேலும், நடிகை ஷ்ரேயா மகள் போட்டோவும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. ஸ்ரேயா ராஜமவுளியின் இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் படத்தில் இறுதியாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவர் சில படங்களை தன் கைவசமும் வைத்துள்ளார்.

விடுமுறையை கொண்டாடுவதற்காக தனது குடும்பத்துடன் மாலத்தீவு சென்றுள்ள ஸ்ரேயா, கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்களையும் மற்றும் வீடியோக்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோக்களும் புகைப்படங்களும் தற்பொழுது வைரலாகி வருகின்றன.