நடிகை ரீமாசெனின் பரிதாப நிலை… அந்த ஒரு புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

நடிகை ரீமா சென் 1981ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். திருமணத்திற்கு பின் நடிப்பதை சுத்தமாக நிறுத்திவிட்டார். இந்த நிலையில் தற்போது அவரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சமூகவலைத்தளங்களில் இது குறித்து சர்ச்சையான கருத்துக்களும் வெளியிடப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் பள்ளிப்படிப்பை முடித்த

ரீமா சென் மும்பையில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். அதன்பின்னர் மாடலிங் துறையில் சில காலம் இருந்துள்ளார். அதன்பின்னர், 2001ஆம் ஆண்டு மாதவனுக்கு ஜோடியாக மின்னலே படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடிப்பதற்கு ரீமா சென்னுக்கு சிறந்த அறிமுக நடிகை விருது கிடைத்தது. அதன்பின்னர் பகவதி, தூள், செல்லமே, கிரி, திமிரு, வல்லவன் ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களில் நடித்தார். ரீமா சென் தமிழில் நடித்த கிட்டத்தட்ட அனைத்து படங்களுமே ஹிட் படங்கள் தான். கடைசியாக ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தில் நடித்தார்.

அதன்பின்னர் சரியான பட வாய்ப்புகள் இல்லாததால்.. கடந்த 2012ஆம் ஆண்டு சிவ் கரண் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இருவருக்கும் தற்போது ருத்ரவீர் சிங் என்ற 5 வயது குழந்தை உள்ளது. இவரின் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.