இந்த உலகில் விலை மதிக்கவே முடியாதது குழந்தையின் புன்னகை தான். குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். , குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே நேரம் போய்விடும். அதனால் தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலை சொல்லை கேட்காதவர்கள் எனத் தொன்றுதொட்டு சொல்லப்படுகிறது.

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.

இங்கேயும் அப்படித்தான் ஒருவயதே ஆன குழந்தைக்கு அவரது பெற்றோர்கள் அழகாக பட்டி வேட்டி கட்டியுள்ளனர். அந்தக் குழந்தை அதை போட்டுக்கொண்டு செம ஸ்டைலாக போஸ் கொடுக்கிறது. அந்த நேரத்திலேயே லுங்கி டேன்ஸ் பாடலை செல்போனில் போட்டுவிட பட்டு வேட்டி கட்டியிருக்கும் அந்தக் குழந்தை அந்த பாடலுக்கு செம குத்தாட்டம் போடுகிறது.