சீனா நாட்டில் ஃபூஜியான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் சில நாட்களுக்கு முன்னர் அழகிய ஜோடி ஒன்றிற்கு திருமணம் நடைபெற இருந்தது. திருமண மண்டபத்தில் ஒரு பெரிய திரை அமைக்கப்பட்டிருந்தது. அந்தத் திரையில் மணமக்கள் தங்களுடைய சிறுவயதிலிருந்து எவ்வாறு வளர்ந்தார்கள் என்பது குறித்த வீடியோ வெளியாகும் என்று கூறப்பட்டது.

திடீரென்று மணமகள் வேறொரு நபருடன் படுக்கை அறையில் படுத்திருந்த வீடியோ வெளியாக தொடங்கியது. இதனால் பங்குபெறும் பரபரப்பு ஏற்பட்டது. வனமகன் தன் வருங்கால மனைவியை நோக்கி “எனக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்காதே” என்று ஆவேசமாக கூறினார். உடனே அந்த மணப்பெண் தன்னுடைய கையிலிருந்த பூங்கொத்து எதுக்கு மணமகன் மீது வீசி சண்டை போட தொடங்கினார். உடனடியாக உறவினர்கள் இருவரையும் பிரித்து வைத்தனர்.

இந்த விவகாரம் தான் தற்போது சீன நாட்டு ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. மணப்பெண்ணுக்கும் அவருடைய மைத்துனருக்கும் கடந்த 2 ஆண்டுகளாகவே நெருக்கமான பழக்கமிருந்து வந்ததாக கூறப்படுகிறது. மணமகன் வீட்டை புனரமைக்கும் போது பாதுகாப்பு காரணமாக கேமரா பொருத்தி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கேமராவின் மூலம் தான் அந்த அந்தரங்க காட்சி பதிவானது என்றும் தெளிவாகியுள்ளது. மற்றொரு சாரார் இந்த வீடியோ உண்மையானது அல்ல என்றும் ஆப் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.