ரேஷ்மா பசுபுலேட்டி, இவர் தொலைக்காட்சியில் பிரபலமாக இயங்கும் சீரியல்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பிரபல நடிகரான “பாபி சிம்ஹா”வின் உறவினரும் கூட. ரேஷ்மா பசுபுலேட்டி “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதாவது இந்த திரைப்படத்தில் அவர் ஒரு உலகம் சுற்றும் பெண்ணாக நடித்துள்ளார்.இந்த திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகர் “சூரி”க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பெ ரும் அளவிற்கு ரசிகர்களை எளிதில் கவர்ந்து விட்டார்.

அதுமட்டுமல்லாமல் தற்போது நமது ரேஷ்மாவின் பெயரைக்கூட “புஷ்பா” என்று சொன்னால் தான் நமது ரசிகர்களுக்கு தெரிகிறது. அந்த அளவிற்கு அந்த படத்தில் இவர் பிரபலமானார். ரேஷ்மா விற்கு திரைப்படத்தை விட சீரியல்களில் தான் அதிகம் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரபல அரசியல்வாதி மனைவியான ராதிகா நடித்து வெளிவந்த “வாணி ராணி” என்ற சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இசையமைப்பாளரும் , நடிகருமான ஜீ.வி.பிரகாஷ்-ன் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார் ரேஷ்மா. இதனை பார்த்த ரசிகர்கள், ஜீ.வி.. வொய் திஸ் குறு குறு பார்வை.. என்று comment செய்துள்ளனர். அந்த புகைப்படம் இதோ,,,
