பிரபல கிராமிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகளுக்கு ஏற்பட்ட சோகம்- கடும் அதிர்ச்சியில் குடும்பம்

கிராமிய பாடல்கள் பாடி அசத்தியவர் புஷ்பவனம் குப்புசாமி. கிராமிய பாடல்களுக்காக இவர் பல ஆராய்ச்சிகள் செய்துள்ளார், அதில் வெற்றியும் கண்டுள்ளார். குப்புசாமி-அனிதா குப்புசாமியின் மூத்த மகள் பல்லவி எம்.பி.பி.எஸ் படித்துள்ளார். இந்நிலையில் இன்று புஷ்பவனம் குப்புசாமியின் உறவினர் கவுசிக் என்பவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதில், புஷ்பவனம் குப்புசாமியின் மகள் டாக்டர் பல்லவி  ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி முதல் காணவில்லை என அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில் இரவு அவருக்கும் அவரது தங்கைக்கும்

இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும் அதில் கோபமடைந்த அவர், வீட்டிலிருந்த காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. போலீசாருக்கு கிடைத்த புகாரின் பேரில் தற்போது அவர்கள் தீவிர விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.