பிக் பாஸ் வீட்டிற்க்குள் முதல் ஒரு சில வாரத்திற்க்குள்ளாக யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் எவிக்ட் ஆன வனிதா வீட்டை விட்டு வெளியேறினார். அவரது எலிமினேஷன் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை மற்றும் கண்டெட்ன் டிமாண்ட் ஏற்படுத்தியது எனலாம், எதையும் தைரியமாக செய்யக்கூடியவர் வனிதா. எந்த பிரச்சனையும் அவரது குரல் மற்றும் பேசும் தோரணையால் சிக்கலுக்கு உள்ளாகும் எனலாம், இந்த நிலையில் கடந்த 50 ஆவது நாள்.பிக்பாஸ் வீட்டிற்க்குள் கெஸ்டாக நுழைந்த வனிதா.

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார், எனினும் வந்தவுடன் முகைன் மற்றும் அபி பிரச்சனையை கையில் எடுத்த வனிதா, அதற்காக பேசி வந்தார். கடந்த வாரங்களில் இருவருக்கும் உண்டான உரசல்கள் கமல் முன்னிலையில் துவங்கி ஒருவரை ஒருவர் சேர்களினால் தாக்கிக்கொள்ளும் அளவிற்க்கு எல்லை மீறியது. இதற்கிடையில், இன்று அதனை தொடர்ந்து நடந்த வாக்கு வாதத்தின் போது வனிதா அதிகமாக

பேசியதாகவும் கோவத்தின் உட்சியில் முகைன் அவரை அறைந்ததாகவும் பிக் பாஸ் வட்டாரம் தகவல் வெளி வந்துள்ளது. இதனை அடுத்து ஏற்கனவே சரவணன் சர்ச்சையில் அவர் வெளியேற்றப்பட்டார் இதைத்தொடர்ந்து முகின், வனிதாவ அறைந்தது மற்றுமின்றி கோபம் வந்தால் எல்லை மீறும் குணாதிசயம்
உடைப்பது தாக்கிக்கொள்வது என ஏற்கனவே பல சம்பவங்கள் மூலம் அது உறுதியாகியுள்ளது.இதைத்தொடர்ந்து முகெனுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
