முடி கொட்டுதா..?? இனி கவலைய விடுங்க..!!! பணம் தேவையில்லை.!!! வீட்டிலிருக்கும் பொருளை வைத்தே முடி கொட்டுவதை தடுத்துவிடலாம்.

முடி கொட்டுபவர்களுக்கு என்னதான் முடிக்கு பராமரிப்பு செய்தாலும் உள்ளே உட்கொள்ளும் சத்தான முக்கியமாக இரும்பு சத்துள்ள உணவுகள் மூலமாகவே நல்ல பலன்கள் கிடைக்கும். என்னதான் முடி வளர பரம்பரை ஒரு காரணம் என்றாலும், நாம் முயன்றால் கொஞ்சம் வளர்ச்சியை கொண்டு வரலாம் அல்லது இருப்பதையாவது காப்பாத்தலாம்.நம் கவனம் முடி வளர்ப்பதை விட இருக்கும் முடியில் சற்று முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

பிரச்சனைகளில்லாத கூந்தல் யாருக்கும் அமைவதில்லை. முடி உதிர்தல், இளநரை, பொடுகு அரிப்பு, பேன் தொல்லை, சொட்டை எனக் கூந்தலைப் பாதிக்கும் பிரச்சனைகள் ஏராளம். இரும்பு சத்துள்ள உணவு சாப்பிடுவது மிக அவசியம். ஒரு நாளைக்கு ஒரு கட்டு கீரையை தனியாக நீங்கள் மட்டும் சாப்பிடுங்கள்.இதில் முக்கியம் பொடுகு இது தான் தலையில் உள்ள முடி உதிர்விற்கு பெரும் பங்கு வகிக்கும்.நீங்கள் உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.அப்போது தான் இந்த பொடுகு தொல்லை தீரும்.

இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது. அது முற்றிலும் தவறு. தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் .அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.தேங்கா எண்ணையில் உள்ள மருத்துவ குணமே வேற இதனை அறிந்து கொண்ட கேரளா மக்கள் எந்த ஒரு விசியத்திற்கும் தேங்காய் எண்ணையை பயன்படுத்தாமல் இருக்கமாட்டார்கள்.

எண்ணெய் குளியல் மிகவும் அவசியம். சிறிது நல்ல எண்ணெயில் இரண்டு மிளகு, பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும், முடி உதிர்வதையும் தடுக்கலாம்.உடல் சூடு நம் உடலை மட்டும் அல்லாமல் தலைமுடி உதிர்விற்கும் ஒரு முக்கிய பங்காக அமைகிறது.

கறிவேப்பில்லை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம்.அல்லது சமையலில் போடும் கறிவேப்பிலயை சாப்பிட்டாலே போதும் முடிந்தவரை அதை ஒதுக்காமல் இருக்க வேண்டும்.

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து, ஒருநாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

மேலே உள்ள அணைத்து வைத்தியமும் உங்களின் உடலின் உஷ்ணத்தை குறைக்க தான்.முடி உதிர்விற்கு முக்கியமான ஒன்று தான் இந்த உடலின் வெப்பம் அதாவது உஷ்ணம்.நீங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்து இருக்க இந்த வைத்தியத்தை செய்யுங்கள் பிறகு நிச்சயம் முடிஉதிர்வு குறையும்.