தமிழ் சினிமாவில் தல தளபதி என்றைக்கும் மாஸ் தான். அன்று முதல் இன்று வரை இருவரின் ரசிகர் கூட்டத்தை யாராலும் தடுக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் அளவிற்கு அவர்கள் இடம் பிடித்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது விஜய் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்று நடந்துள்ளது. நடிகர் விஜய்யின் பெற்றோர்கள் எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் இருவரும் இணைந்து விஜய்யின் ரசிகர் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். அப்போது விஜய் ரசிகர் இவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்று உள்ளார்.

அதன் பின்னர் விஜயின் அம்மா ரசிகரின் சமையலறைக்கு சென்று சமைத்து உள்ளார். தற்போது விஜயின் பெற்றோர் ரசிகர் வீட்டில் எடுத்து கொண்ட காணொளி மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதை விஜய் ரசிகர்கள் அனைவரும் அதிகமாக ஷேர் செய்தும், பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
#ShobaAmma♥?@actorvijay pic.twitter.com/Vlg5m5UzN1
— ஒட்டன்சத்திரம் தளபதி சிவா (@fearless_shiva) January 20, 2020