நாம் அன்றாடம் பல விதமான நிகழ்வுகளை காண்கிறோம், கேட்க்கிறோம். எனவே தற்போது வேலூர் அருகே மிகவும் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. வேலூர் அருகே 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மகள் நிவேதினி (14). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வகுப்பறை மேசையில் திடீரென மாணவி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாணவியின் பெற்றோருக்கு பள்ளியில் இருந்து தகவல் கொடுத்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாணவி பரிதாபமாக உயி ரி ழந்தார்.
இதனை அடுத்து மாணவியின் உடல் பி ரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.