வானில் இருந்து படுவேகத்தில் வந்து விழுந்த மர்ம பொருள்! தொட்டால் ஷாக் அடித்த விபரீதம்! அதிர்ந்த விவசாயிகள்!

பீகார் மாநில கிராமத்தில் விவசாய நிலத்தில் வந்து விழுந்த எரிகல் விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பீகார் மாநிலத்தின் மதுபானி மாவட்டத்துக்குட்பட்ட அந்த கிராமத்தில் விவசாயிகள் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மிகுந்த சத்தத்துடன் புகையை கக்கியபடி விவசாய நிலத்தில் வந்து விழுந்த ஒரு பொருளைப் பார்த்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். அருகில் சென்று பார்த்தபோது அந்தக் கல் விழுந்த இடத்தில் பெரிய பள்ளம் உருவாகியிருந்தது. அங்கிருந்து அந்தக் கல்லை அவர்கள் வெளியே இழுத்த போது ஷாக் அடிப்பது போன்று இருந்துள்ளது.

இருந்தாலும் அது பெரிய அளவில் ஷாக் அடிக்கவில்லை. ஆனால் அந்த கல் சுமார் 15 கிலோ எடையுள்ளதாக இருக்கும் என தெரியவந்தது. அந்த கல்லில் இருந்து புகை வந்து கொண்டிருந்த நிலையில் அந்த பொருள் குறித்து கிராம மக்கள் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதையடுத்து அந்தக் கல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. அதை ஆய்வு செய்த வல்லுநர்கள்

அது எரிகல் என உறுதிப்படுத்தினர். எரிகல் என்பது தூசியும் பாறையும் இணைந்த பொருளாகும். அது விண்ணில் பூமியின் சூழ்நிலையை கடந்து செல்லும் போது எரிகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் எரிகல் தாக்கி

ஒரு பேருந்து ஓட்டுனர் உயிரிழந்த நிலையில் மேலும் 3 பேர் காயமடைந்தனர். 2013 ஆம் ஆண்டு ரஷ்யாவின் யூரல் மலைப் பகுதியில் ஒரு எரிகல் விழுந்த அதிர்ச்சியில் பல வீடுகள் சேதம் அடைந்தன 1200 பேர் காயமடைந்தனர்.