40 வருட காதல்..! மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் மெழுகு சிலை வைத்த பாசக்கார கணவர்..! அவர் கூறிய உ ருக்கமான வரிகள்..!

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூர் பகுதியில் உள்ள தென்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ஆசைத்தம்பி. இவரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி. இவருக்கு ‘பெரியபிராட்டி அம்மாள்’ என்பவருக்கும் 1977-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். சொந்த ஊரில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வந்து மளிகைக் கடை நடத்தி வந்துள்ளார்.

பின் மனைவி பெரியபிராட்டி அம்மாள் வழிகாட்டுதலின் படி, கேபிள் டி.வி தொடங்கவே, கைநிறைய வருமானம் வந்தது. அவர் விருப்பப்படி இடம் வாங்கி வீடு கட்டி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், தி டீரென பெரியபிராட்டி அம்மாளுக்கு உடல் நிலை பா திக்கப்பட்டது. மருத்துவமனையில் ப ரிசோ தித்தபோது அவருக்கு புற்று நோய் பா திப்பு என தெரியவர, மொத்த குடும்பத்தினரும் அ திர் ச்சிய டைந்தனர்.

உடல் நிலை மோ சமாக, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அவர் இ ற ந்துவி ட்டார். இந்நிலையில் இதற்க்கு சிலநாட்கள் முன்னதாக ஆசைத்தம்பி, ”நான் உனக்கு சிலை வைக்கப்போகிறேன்” என தெரிவித்துள்ளார். அதற்க்கு அவரும் சம்மதம் தெரிவித்தார்.

இதனையடுத்து, பெரிய பிராட்டி அம்மாள் இற ந்து 16-வது நாளன்று மாமல்லபுரத்தில் உள்ள சிற்பி ஒருவருடன் ஆலோசனை நடத்தி, சிலைக்கான கல்லைத் தேர்வு செய்து, கடந்த மாதம் 27-ம் தேதி சிலையை உறவினர், நண்பர்கள் அனைவருக்கு அழைப்பிதழ் கொடுத்து சிலையை திறந்து வைத்துள்ளார் ஆசைத்தம்பி. இந்த சிலை, கருங்கல்லால் செதுக்கப்பட்டுள்ளது.

5 அடி, ஓர் அங்குல உ யரத்தில் சிலை உள்ளது. இது சம்மந்தமாக அவர் கூறியது, ”இந்த சிலை வடிவத்தில் என்னோடும் என் குழந்தைகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தினமும் அவரோடு நான் இரண்டு மணி நேரம் பேசிவருகிறேன். சிலை வந்த பிறகு எனக்குப் பத்து வயது குறைந்தது போல உள்ளது” என அவர் பேசினார்.