50 வயசாச்சி…. இன்னும் சிங்கிளாகவே இருக்கும் எஸ்.ஜே.சூர்யா…. உண்மை காரணம் இதுதான்…. அவரே சொன்ன பதில்….!!!

தமிழ் சினிமாவில் டைரக்டர், திரைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர்,தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வருபவர் தான் எஸ் ஜே சூர்யா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா உலகிலும் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. ஆரம்பத்தில் ஹோட்டலில் வேலை செய்து வந்த இவர் பாக்கியராஜ் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றிய இவர் படிப்படியாக சினிமாவின் உச்சத்தை தொட்டார். ஒரு பக்கம் நடிகராகவும் மறுபக்கம் வில்லனாகவும் பல்வேறு படங்களில் அசத்தியுள்ளார். அதன்படி இவர் வில்லனாக நடித்த மெர்சல்,மாநாடு மற்றும் டான் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இவருக்கு சினிமாவில் சில நடிகைகளுடன் காதல் இருப்பதாக அவ்வப்போது கிசுகிசுக்கள் வெளியாகி வந்தாலும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகின்றார். இவர் முதன்முதலாக வாலி திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார்.

50 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வரும் எஸ்.ஜே சூர்யாவிடம் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் என்று கேட்கும்போது, நியூ திரைப்படத்தில் தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் முதலீடு செய்தேன் எனவும், ஒருவேளை இப்படம் தோல்வி அடைந்திருந்தால் அது தன்னுடன் போயிருக்கும், அதுவே எனக்கே திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் என இருந்தால் அது அவர்களையும் பாதிக்கும். எனவே அவர்கள் என்னால் பாதிக்க கூடாது என்பதற்காகத்தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதாக எஸ் ஜே சூர்யா தெரிவித்துள்ளார்.