விவாகரத்துக்கு இதுதான் காரணம்…. 21 வருடங்களுக்குப் பின்…. மனந்திறந்த நடிகர் பார்த்திபனின் முன்னாள் மனைவி….!!!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் பார்த்திபன்.இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளன. நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கடந்த வருடம் இயக்கிநடித்த ஒத்த செருப்பு திரைப்படம் மக்களின் மனதை வெகுவாக வென்று நல்ல ஹிட் கொடுத்தது.

சமீபத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை உலகின் முதல் சிங்கிள் சார்ட் திரைப்படமாக எடுத்து இயக்குனர் பார்த்திபன் மிகப்பெரிய சாதனையைப் படைத்தார். இவர் முதல் முதலாக புதிய பாதை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் சீதா.

முதல் படத்திலேயே பார்த்திபன் மற்றும் சீதா இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்தது. கடந்த 1990 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு இரண்டு பெண்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களின் குடும்ப வாழ்க்கை 2001 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். அதன் பிறகு சீதா, ரமேஷ் என்ற சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் பார்த்திபன் திருமணம் செய்து கொள்ளாமல் தனது இரண்டு பெண் பிள்ளைகளுக்காக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். முழுக்க முழுக்க சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார் பார்த்திபன்.

இதனிடையே கொஞ்சம் காலமாக சீரியலில் தலை காட்டி வந்த சீதா தற்போது அதிக கவர்ச்சியாக மாறி அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நடிகை சீதாவிடம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால் தான் பார்த்திபனிடமிருந்து நீங்கள் பிரிந்தீர்களா என்று கேள்வி கேட்டார்.

 

அதற்கு பதில் அளித்த சீதா, ஆம் எனக்கு எதிர்பார்ப்புகள் இருந்தது, நான் ஒரு சராசரி பெண், உலகம் அறியாத ஒரு மிடில் கிளாஸ் பெண்தான். பார்த்திபனும் என்னை போலவே ஒரு மிடில் கிளாஸ் தான்.நான் பணத்தை எதிர்பார்த்து போகும் அளவிற்கு எல்லாம் அவரும் இல்லை. ஆதலால் நான் பணத்தை எல்லாம் எதிர்பார்க்கவும் இல்லை ஆனால் நான் எதிர்பார்த்தது என்னவோ அவரின் முழு அன்பு தான். இவ்வளவுதான் நான் எதிர்பார்த்தது. ஆனால் இது கூட அங்கு இல்லை என்றால் வாழ்க்கையில் வேறு என்ன இருக்கின்றது என மிகவும் கண் கலங்கி சீதா கூறினார்.