நடிகை சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகும் முன்பு தொடர்ந்து நடித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன் இணைய தள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் வளர்க்கும் செல்ல நாய்க் குட்டியின் கழுத்தில், ‘மை பர்ஸ்ட் ஹஸ்பெண்ட்’ என எழுதிய வாசகத்தை தொங்கவிட்டிருந்தார். அதற்கு சைதன்யா ஒன்றும் கூறாமல் மவுனம் காத்தாலும் அவரது ரசிகர்கள் சமந்தாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கணவரை இதுபோல் அவமானப் படுத்தலாமா என்று அவர்கள் கோபத்தை வெளிப்படுத்தினார். நாக சைதன்யா குடும்பத்தினருடன் திருமணம் ஆன புதிதிலிருந்து சுமுக உறவை கடைபிடித்து வருகிறார் சமந்தா. சமீபகாலமாக அந்த உறவில் என்ன பிரச்னையோ தெரியவில்லை. குடும்ப விழாக்களை புறக்கணித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் அகினேனி தேசிய விருது விழா நடந்தது. இது நாகார்ஜுனாவின் குடும்ப விழா. ஆனால், இவ்விழாவில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர். ஆனால் சமந்தா மட்டும் பங்கேற்கவில்லை. அதேபோல் நாகேஸ்வரராவின் பேரன் ஆதித்யா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

அதிலும் சமந்தா கலந்துகொள்ளவில்லை. இதுதான் தற்போது நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் இடையே புகைச்சலா என்று சர்ச்சையை எழுப்பி உள்ளது. எந்த விழாவாக இருந்தாலும் கணவருடனேயே கலந்து கொள்ளும் சமந்தா இப்போது தனியாகவே வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற பிரபல தொலைக்காட்சி நடத்திய விழா ஒன்றிற்கு தனியாகவே வந்துள்ளார்.
வந்தவர், மிகவும் கவர்ச்சியானஉடையில் வந்திருந்தார். ப்ரா, பேண்ட்டி தெரியும் அளவிற்கு மிகவும் மெல்லிய ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன
