பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பல ஏபிசிஓடுகளை கடந்து சென்றுகொ ண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். கடந்த சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களில் ஒருவர் தான் லாஸ்லியா.இலங்கை பெண் லொஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராணியாகவும் பார்ப்பவர்களின் கனவு கண்ணியாகவும் இருந்தார்.

பிறகு கவின் லோச்லியா காதல் வெளிச்சம் ஆனதும் அவரை பற்றி பலர் பல விதமான கருத்தை தெரிவித்து வந்தனர்.. இந்நிலையில் லொஸ்லியாவின் மறைந்த சகோதரியின் பிறந்தநாள் நேற்றைய தினம். அதனை முன்னிட்டு தனது சகோதரியுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், இன்று க்யூடியின் பிறந்தநாள். ஆனால், இப்போது அவள் இல்லை.

எனக்கு வாழ்க்கை குறித்து பல்வேறு விஷயங்களை கற்றுக் கொடுத்தவள்.. நம்மை விட்டு பிரிவதற்கு முன்பாக உறவுகளுக்கு மரியாதையையும் முக்கியத்துவத்தையும் கொடுங்கள். அவர்கள் சென்ற பின்பு அதை பற்றி வரு ந்தாதீர்கள் என்று உருக்கமான பதிவு செய்துள்ளார் பிக் பாஸ் புகழ் லாஸ்லியா. அதனை பார்த்த ரசிகர்கள் சோகத்தில் குறித்த புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.