அடடே… ‘விருமாண்டி’ பட அபிராமியின் கணவர் இவரா…? பாக்க செம்ம smart -ஆ இருக்காரே-பா…

1995 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான கத புருஷன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிராமி. இவரின் இயற்பெயர் திவ்யா கோபி குமார். இவர் 2001 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அந்த முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. பின்னர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி படத்தில் கதாநாயகியாக நடிக்க, அந்த படம் மிக பெரிய ஹிட் கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து இவருக்கு சினிமா உலகில் பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி கேரளாவில் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான பவணியின் பேரனான ராகுல் பவணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் திருமணத்திற்கு பிறகும் மூன்று படங்களில் நடித்தார்.

இவர் கடைசியாக தமிழில் நடித்த திரைப்படம் 36 வயதினிலே. பின்னர் பட வாய்ப்புகள் குறைந்த காரணத்தினால் சீரியல் பக்கம் சென்றுள்ளார். இவர் அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில் அவர் தனது கணவர் குறித்து பேசும் வீடியோ ஒன்றை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.